மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் - இளையராஜா கூட்டணி, தமிழ் சினிமாவில் மிக வெற்றிகரமாக அமைந்த கூட்டணியாகும்.
இந்த இருவரும் இணைந்து 6 படங்களைப் படைத்துள்ளனர். அவற்றில் 2 படங்களுக்கு இளையராஜா தேசிய விருது பெற்றார். அந்த அளவு சகாப்தம் படைத்த கூட்டணியாக அமைந்தது.
கே பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் முறையாக இளையராஜா இசையமைத்தது சிந்து பைரவி படத்துக்குத்தான். அந்தப் படத்தின் இசை ஒரு க்ளாஸிக் ஆக அமைந்தது. தேசிய விருதும் கிடைத்தது. இளையராஜாவுக்கு கிடைத்த இரண்டாவது தேசிய விருது அது.
பின்னர், 1986-ல் பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்துக்கு புதுமையான முறையில் இசையமைத்தார் இளையராஜா. பாடல்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்றன.
1987-ல் பாலச்சந்தர் இயக்கிய படம் மனதில் உறுதி வேண்டும். இதிலும் அருமையான பாடல்கள் தந்திருந்தார் இளையராஜா.
1988-ல் பாலச்சந்தர் தமிழிலும் தெலுங்கிலும் இயக்கிய படம் ருத்ர வீணை மற்றும் உன்னால் முடியும் தம்பி. ருத்ர வீணையில் சிரஞ்சீவி நாயகன். உன்னால் முடியும் தம்பியில் கமல். இரண்டு படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார். மிக அருமையான பாடல்கள், நுட்பமான பின்னணி இசை. ருத்ரவீணைக்கு சிறந்த இசைக்கான தேசிய விருது கிடைத்தது.
கே பாலச்சந்தர் - இளையராஜா இருவரும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் புதுப்புது அர்த்தங்கள். அனைத்துப் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.
ஒரு தயாரிப்பாளராக 14 படங்களில் இளையராஜாவுடன் பணியாற்றியுள்ளார் பாலச்சந்தர். அவற்றில் மேற்கண்ட 6 படங்கள் தவிர, நெற்றிக் கண், புதுக்கவிதை, நான் மகான் அல்ல, பூ விலங்கு, எனக்குள் ஒருவன், ஸ்ரீராகவேந்திரர், வேலைக்காரன், சிவா, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை போன்றவை இருவரும் இணைந்த வெற்றிப் படங்களாகும்.
Post a Comment