ஷங்கரின் ஐ-க்கு நெருக்கடி தீர்ந்தது?

|

ஐ படத்துக்கு சிக்கல் தீர்ந்து விட்டதாகவும், திட்டமிட்டபடி பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஐ படத்துக்கு எதிராக திடீரென வழக்கு தொடரப்பட்டது. ரூ 19 கோடி கடனை திருப்பிச் செலுத்தும் வரை படத்தை வெளியிடக் கூடாது என்று மனுத் தாக்கல் செய்தனர் கடன் கொடுத்தவர்கள்.

ஷங்கரின் ஐ-க்கு நெருக்கடி தீர்ந்தது?

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 வாரங்களுக்கு படத்தை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டது.

இதனால் படம் பொங்கலுக்கு வருமா என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் தயாரிப்பாளரோ, படம் நிச்சயம் வெளியாகும் என்றும், சிக்கலை பேசித் தீர்த்துவிடுவோம் என்றும் கூறியிருந்தார்.

அதன்படி, பிரச்சினையை பேசித் தீர்த்துவிட்டதாகவும், தடை உத்தரவு நீங்கும் என்றும், திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment