பிரபல தெலுங்கு நடிகர் நாராயணா இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 63.
பீமாவரத்தைச் சேர்ந்த நாராயணா, 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவற்றில் பல படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு நேரடி தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.
ஐந்து தடவை சிறந்த காமெடி நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
எம்.எஸ். நாராயணா உடலுக்கு தெலுங்கு நடிகர்- நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். ரங்க ரெட்டி மாவட்டத்தில் உள்ள விகராபாதில் இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது.
Post a Comment