ஐ படம் பெரும் வெற்றி.. அதுக்கும் மேலே என்றெல்லாம் விளம்பரங்கள் வெளியிட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரன், இப்போது படம் வெற்றியா தோல்வியா என்ற கேள்விக்கு பதிலே சொல்லாமல் மழுப்பியுள்ளார்.
பேட்டியொன்றில், ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம், 'நீங்க சொல்லுங்க... 'ஐ' படம் வெற்றியா... தோல்வியா?' என்று கேட்டுள்ளனர்.
அதற்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் அளித்த பதில் இது:
''உண்மையைச் சொல்லணும்னா... ரஜினி, ஷங்கர் காம்பினேஷனுக்கு என்ன வசூலாகுமோ, அந்த அளவுக்கு 150 கோடி காஸ்ட் பண்ணியிருக்கு அந்தப் படம். 'மெரசலாயிட்டேன்...' பாட்டு கிராபிக்ஸுக்கு மட்டுமே மூணு கோடி ரூபாய் செலவு பண்ணியிருக்கோம். அந்தப் பாட்டை எத்தனை தடவை பார்த்தாலும் சந்தோஷமா இருக்கா... இல்லையா? அதுதான் முக்கியம்.
இன்னொரு உண்மையும் சொல்றேன்... 'ஐ' படத்துக்காக மட்டும் கடந்த ரெண்டு வருஷத்துல 40 கோடி ரூபாய் வட்டி கட்டியிருக்கேன். சினிமா என்கிற அற்புதமான தொழிலுக்காக நான் அதுவும் செய்வேன்... 'அதுக்கு மேல'யும் செய்வேன்!
ஏன்னா, உலகத்துல தொழில் செய்ற யாருமே கடன் வாங்காமல் முன்னேற முடியாது.''
கேட்ட கேள்விக்கு கடைசி வரை பதிலே வரலியா ஆஸ்கர் ரவிச்சந்திரன்!
Post a Comment