பாகுபலிக்கு யு ஏ சான்று... 4000 அரங்குகளில் வெளியாகிறது!

|

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி படத்துக்கு தணிக்கைக் குழு யுஏ சான்று அளித்துள்ளது.

அனுஷ்கா, தமன்னா, பிரபாஸ், ராணா, நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தியாவின் மிக பிரமாண்ட படம் பாகுபலி.

UA for Baahubali

இந்தப் படத்தின் ட்ரைலர் பார்த்து ஹாலிவுட்டே வியந்து பாராட்டியுள்ளது. படத்தை வரும் ஜூலை 7-ம் தேதி வெளியிடுகிறார்கள். தமிழ், தெலுங்கில் நேரடியாக உருவாகியிருக்கும் படம் இது.

இதனை தணிக்கைக் குழுவுக்கு நேற்று அனுப்பினர். படம் பார்த்து முடித்தபிறகு யு ஏ சான்று அளித்துள்ளனர்.

எந்தக் காட்சியையும் நீக்க வேண்டாம் என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் தெரிவித்துவிட்டதால் யுஏ சான்று தரப்பட்டுள்ளது. யுஏ சான்று என்றால் பெற்றோர் துணையுடன்தான் சிறுவர்கள் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று அர்த்தம்.

4000 அரங்குகளில் பிரமாண்டமாய் வெளியாகவிருக்கிறது பாகுபலி.

 

Post a Comment