சென்னை: தொடர்ந்து அப்பாவி வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஜெய் தற்போது ஆக்க்ஷன் அவதாரம் எடுத்து வருகிறார், ஆக்க்ஷனை ஏற்கனவே நடித்த வலியவன் திரைப்படம் ஜெய்க்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
எனினும் அதனைப் பற்றி பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளாமல் தற்போது புகழ் படத்தில் இவன் வேற மாதிரி சுரபியுடன் இணைந்து நடித்து வருகிறார். புகழ் படத்தில் இதுவரையில் நடிக்காத ஒரு வேடத்தில் நடித்து வருகிறார் ஜெய்.
ஆமாம் இந்தப் படத்தில் முதன்முறையாக அரசியல் சார்ந்த கதைக் களத்தில் நடித்து வருகிறார் ஜெய். உதயம் NH 4 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மணிமாறன் இயக்கும் இந்தப் படம் ரொமாண்டிக், எமோஷன், ஆக்க்ஷன் மற்றும் த்ரில்லர் என எல்லாம் கலந்த கலவையாக இருக்குமாம்.
"புகழ்" ஜெய்யின் அப்பாவித் தனத்தை மறைத்து ஆக்க்ஷன் ஹீரோவாக வெளிக்காட்டுமா? என்று பார்க்கலாம்..
Post a Comment