இன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர் விஜய்- ட்விட்டரில் நெகிழ்ந்த சிம்பு

|

சென்னை: வாலு படம் பலமுறை தள்ளிப் போனதில் சிம்புவும் அவரது ரசிகர்களும் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகினர். சமூக வலைதளங்களில் பலரும் வாலு படம் தள்ளிப் போனதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வந்தனர்.

Simbu Says

சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் படம் வெளியே வரவில்லை, இந்நிலையில் வாலு படம் வெளியாக வேண்டி நடிகர் விஜய் அந்தப் படத்திற்கு மிகப்பெரிய அளவில் பண உதவி செய்தார் என்று செய்திகள் வெளியாகின.

தற்போது இதனை உறுதி செய்யும் விதத்தில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். " வாலு படம் வெளியாக உதவி புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி, இன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர்" விஜய் அண்ணா என்று நெகிழ்ந்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் "நீங்கள் பெருமைப் படும்படி கண்டிப்பாக செய்வேன் என நம்புங்கள், நீங்கள் இல்லாமல் நான் இல்லை" என்று தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார்.

தற்போது இந்த ட்வீட்களின் மூலம்விஜய் உதவி செய்தது உறுதியாகி விட்டது, மேலும் சிம்பு ரசிகர்கள் மேற்கொண்ட பிரார்த்தனைகளுக்கும் பலன் கிடைத்து விட்டது.

இதனால் சிம்பு ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் உங்கள் அபிமானத் திரையரங்குகளில் வாலு விரைவில் வெளியாகும்...

 

Post a Comment