போராளி படப்பிடிப்பை பிப்ரவரியில் தொடங்க திட்டம்
1/10/2011 10:45:30 AM
‘நாடோடிகள்’ படத்தில் நடித்த பின் ‘ஈசன்’ படத்தை இயக்க சென்றுவிட்டார் சசிகுமார். இதில் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து ‘போராளி’ என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இதில் சமுத்திரக்கனி இயக்குனர், சசிகுமார் ஹீரோ. போராளி சென்னையில் சில பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும் இளைஞனைப் பற்றியது. சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். சுப்பிரமணியபுரம், நாடோடிகள் போல இந்தப் படத்தில் காதல், காமெடி, சென்டிமெண்ட் அனைத்தும் இருக்கும் என்று தெரிவித்தார் சமுத்திரக்கனி. படப்பிடிப்பை பிப்ரவரியில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
Source: Dinakaran
Post a Comment