தயாரிப்பாளர் சங்க மோசடிகளை 5 பேர் குழு சரிபார்க்க அனுமதி!

|

Tags:


ராம நாராயணன் தலைவராக இருந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த முறைகேடுகள், மோசடிகள் குறித்து அறிய கணக்கு வழக்குகளை கேயார் தலைமையிலான 5 பேர் குழு சரிபார்க்க, தற்காலிக தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. இச்சங்கத்தில் ஏற்கனவே பல கோடிகள் மோசடி நடந்துள்ளதாக அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து சங்க கணக்கு வழக்குகள் மற்றும் உறுப்பினர் பட்டியலை தயாரிப்பாளர் கே.ஆர். தலைமையிலான 5 பேர் குழு சரிபார்க்க செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக சங்கத்தின் தற்காலிக தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

முதல்வர் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு செயற்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அதிருப்தியாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
 

Post a Comment