சினிமாவிலிருந்து விலகி திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் உறுதியாக உள்ளாராம் நடிகை மீரா ஜாஸ்மின்.
இப்போதைக்கு தமிழில் அவருக்குள்ள ஒரே படம் மலையூர் மம்பட்டியான்தான். மலையாளத்தில் ஒரு படம் உள்ளது. வேறு படங்கள் எதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.
இதற்கிடையே, தன்னை ஒப்பந்தம் செய்யத் தேடி வந்த இரு தயாரிப்பாளர்களிடம் விரைவில் தனக்கும் தனது காதலருக்கும் திருமணம் நடக்கவிருப்பதால், படங்களில் நடிக்கும் ஐடியா இல்லை என்று கூறியுள்ளார்.
மாண்டலின் ராஜேஷை ரொம்ப நாளாகக் காதலித்து வருகிறார் மீரா ஜாஸ்மின். இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் சினிமாவுலகில் பேசிக் கொள்கிறார்கள்.
எப்போது திருமணம் என்பதை விரைவில் அறிவிக்கவிருக்கிறார் மீரா. அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் குடுத்தனம் நடத்தப் போகிறாராம்!
Post a Comment