ஏஆர் முருகதாஸ், பாக்ஸ் ஸ்டார் இணைந்து தயாரிக்கும் எங்கேயும் எப்போதும் படம் இரண்டு வாரங்கள் தள்ளிப் போனது. செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம், வரும் செப்டம்பர் 16-ம்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா நடித்த இந்தப் படத்தை முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்கியுள்ளார். சென்னை மற்றும் திருச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காதல் கதை இந்தப் படம்.
ட்வென்டியத் பாக்ஸ் செஞ்சுரி நிறுவனத்தின் முதல் தமிழ்ப் படம் இது என்பதால், இந்தப் படத்தின் வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சென்டிமெண்டாக விநாயகர் சதுர்த்தி அன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர் முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தினர். ஆனால் மங்காத்தா வெளியீடு தங்கள் படத்தின் ஆரம்ப காட்சிகளை பாதிக்கும் என்பதால் பட வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளனர்.
ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா நடித்த இந்தப் படத்தை முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்கியுள்ளார். சென்னை மற்றும் திருச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காதல் கதை இந்தப் படம்.
ட்வென்டியத் பாக்ஸ் செஞ்சுரி நிறுவனத்தின் முதல் தமிழ்ப் படம் இது என்பதால், இந்தப் படத்தின் வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சென்டிமெண்டாக விநாயகர் சதுர்த்தி அன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர் முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தினர். ஆனால் மங்காத்தா வெளியீடு தங்கள் படத்தின் ஆரம்ப காட்சிகளை பாதிக்கும் என்பதால் பட வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளனர்.
Post a Comment