மெக்சிகோ: ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிப்போர்னியா மாகாண ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸினேகர், திரும்பவும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளனர்.
டெர்மினேட்டர் படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக பதவி வகித்து வந்தார். கடந்த ஜனவரி மாதத்தில் அப்பதவியில் இருந்து அர்னால்டு ஓய்வுப் பெற்றார். தற்போது, அப்பதவியில் ஜெர்ரி பிரவுன் என்பவர் உள்ளார்.
இதற்கிடையே, வெளிநாட்டு செய்தி நிறுவனமான நியூ-புளுட்டனில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, பிரபல நடிகர் அர்னால்டு அடுத்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். லாஸ்ட் ஸ்டென்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் (அக்டோபர்) துவங்க உள்ளது.
நிவாடா அடுத்த லாஸ் வேகஸ் சிறையி்ல் இருந்து தப்பி, மெக்சிகோ எல்லையை கடக்கும் சிலரை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட உள்ளது, என தெரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் தனது நடிப்பு அறிவிப்பை வெளியிட்ட நடிகர் அர்னால்டின் அடுத்த படத்தை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
டெர்மினேட்டர் படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக பதவி வகித்து வந்தார். கடந்த ஜனவரி மாதத்தில் அப்பதவியில் இருந்து அர்னால்டு ஓய்வுப் பெற்றார். தற்போது, அப்பதவியில் ஜெர்ரி பிரவுன் என்பவர் உள்ளார்.
இதற்கிடையே, வெளிநாட்டு செய்தி நிறுவனமான நியூ-புளுட்டனில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, பிரபல நடிகர் அர்னால்டு அடுத்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். லாஸ்ட் ஸ்டென்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் (அக்டோபர்) துவங்க உள்ளது.
நிவாடா அடுத்த லாஸ் வேகஸ் சிறையி்ல் இருந்து தப்பி, மெக்சிகோ எல்லையை கடக்கும் சிலரை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட உள்ளது, என தெரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் தனது நடிப்பு அறிவிப்பை வெளியிட்ட நடிகர் அர்னால்டின் அடுத்த படத்தை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Post a Comment