சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில், அரசு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் தீபனிடம் குற்றவியல் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன். கடந்த 2008ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக விஜயன் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக விஜயனின் மனைவியான சுதாவின் சகோதரி பானு உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை, சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின் போது அரசு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் தீபனிடம், மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன் குறுக்கு விசாரணை செய்தார்.
விசாரணையின் போது தீபன் கூறுகையில், "சாட்சி சொல்வதை தடுப்பதற்காகவே பானுவின் பணியாளர் ஒருவர் குற்ற புகார் கொடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல் அடக்கத்தின் போது, ஊர்வல வேனில் இருந்து ஜெயலலிதாவை அடித்து உதைத்தாக எனக்கு ஞாபகம் இல்லை. மேலும் விஜயன் கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு முன்னாள் முதல்வர் கருணாநிதியை, சுதா சந்தித்து பேசியது குறித்து எனக்கு தெரியாது", என்றார்.
கே.எஸ்.தினகரன் குறுக்கு விசாரணைக்கு பின்னர், சி.பி.சி.ஐ.டி தரப்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயராஜ், சுதாவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை, நடிகர் தீபனிடம் கேட்டு எதிர்த்தரப்பு வழக்கறிஞர் அவரை துன்பறுத்துகிறார், என்றார்.
வாதங்களை கேட்ட நீதிபதி பி.தேவதாஸ் வழக்கை மற்றொரு தேதிக்கு மாற்றி வைத்தார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன். கடந்த 2008ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக விஜயன் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக விஜயனின் மனைவியான சுதாவின் சகோதரி பானு உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை, சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின் போது அரசு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் தீபனிடம், மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன் குறுக்கு விசாரணை செய்தார்.
விசாரணையின் போது தீபன் கூறுகையில், "சாட்சி சொல்வதை தடுப்பதற்காகவே பானுவின் பணியாளர் ஒருவர் குற்ற புகார் கொடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல் அடக்கத்தின் போது, ஊர்வல வேனில் இருந்து ஜெயலலிதாவை அடித்து உதைத்தாக எனக்கு ஞாபகம் இல்லை. மேலும் விஜயன் கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு முன்னாள் முதல்வர் கருணாநிதியை, சுதா சந்தித்து பேசியது குறித்து எனக்கு தெரியாது", என்றார்.
கே.எஸ்.தினகரன் குறுக்கு விசாரணைக்கு பின்னர், சி.பி.சி.ஐ.டி தரப்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயராஜ், சுதாவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை, நடிகர் தீபனிடம் கேட்டு எதிர்த்தரப்பு வழக்கறிஞர் அவரை துன்பறுத்துகிறார், என்றார்.
வாதங்களை கேட்ட நீதிபதி பி.தேவதாஸ் வழக்கை மற்றொரு தேதிக்கு மாற்றி வைத்தார்.
Post a Comment