பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அம்மா வேடங்களில் நடித்திருப்பவர் எஸ்.என். லட்சுமி. 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறார். சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற் றார். இந்நிலையில் நேற்றிரவு 10.30 மணி அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று மாலைவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிறகு விருதுநகர் அருகே உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு கார் மூலம் உடல் கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு தன்னை அடக்கம் செய்வதற்காகவே தனி இடம் வாங்கி வைத்திருக்கிறாராம். அந்த இடத்தில் இறுதி சடங்கு நடக்கிறது. 12 வயதில் நடிக்க வந்தவர் லட்சுமி. என்.எஸ்.கிருஷ்ணன். எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.பாலசந்தர் நாடகங்களில் நடித்ததுடன் சொந்தமாக நாடக கம்பெனி நடத்தினார். 5 ஆயிரம் நாடகங்களில் நடித்திருக்கிறார். 'சந்திரலேகா படத்தில் சிறுவேடத்தில் நடிக்க தொடங்கியவர், மாட்டுக்கார வேலன், சர்வர் சுந்தரம், சின்ன வாத்தியார், தேவர் மகன், மைக்கேல் மதன காமராஜன் உள்பட 1,500 படங்களில் நடித்திருக்கிறார். பாக்தாத் திருடன் படத்தில் புலியுடன் சண்டை போடும் காட்சியில் இவர் டூப் இல்லாமல் நடித்ததாக அப்போது பரபரப்பு ஏற்பட் டது. சமீபகாலமாக டி.வி. சீரியல்களில் நடித்து வந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர் பலர்
அஞ்சலி செலுத்தினர்.
அங்கு தன்னை அடக்கம் செய்வதற்காகவே தனி இடம் வாங்கி வைத்திருக்கிறாராம். அந்த இடத்தில் இறுதி சடங்கு நடக்கிறது. 12 வயதில் நடிக்க வந்தவர் லட்சுமி. என்.எஸ்.கிருஷ்ணன். எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.பாலசந்தர் நாடகங்களில் நடித்ததுடன் சொந்தமாக நாடக கம்பெனி நடத்தினார். 5 ஆயிரம் நாடகங்களில் நடித்திருக்கிறார். 'சந்திரலேகா படத்தில் சிறுவேடத்தில் நடிக்க தொடங்கியவர், மாட்டுக்கார வேலன், சர்வர் சுந்தரம், சின்ன வாத்தியார், தேவர் மகன், மைக்கேல் மதன காமராஜன் உள்பட 1,500 படங்களில் நடித்திருக்கிறார். பாக்தாத் திருடன் படத்தில் புலியுடன் சண்டை போடும் காட்சியில் இவர் டூப் இல்லாமல் நடித்ததாக அப்போது பரபரப்பு ஏற்பட் டது. சமீபகாலமாக டி.வி. சீரியல்களில் நடித்து வந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர் பலர்
அஞ்சலி செலுத்தினர்.
Post a Comment