எப்போதும் நடிப்புக்குத்தான் முக்கியத்துவம் தருவேன் என்று பிரகாஷ்ராஜ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'அபியும் நானும்' படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து இயக்கினேன். இப்போது 'தோனி'யை இயக்கியுள்ளேன். பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் மன இறுக்கத்தையும், அவர்களைப் படிக்க வைக்க, பெற்றோர்கள் சந்திக்கும் சிரமங்களையும் சொல்லியிருக்கிறேன். கல்வி கற்கும் நிலையும், கற்பிக்கப்படும் முறையும் மாற வேண்டும் என்ற கருத்தையும் படம் சொல்கிறது. இனி நான் டைரக்டரா, நடிகரா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. சிறந்த கதை அமைந்தால், தொடர்ந்து இயக்குவேன். ஆனால், நடிப்புக்குத்தான் முக்கியத்துவம் தருவேன்.
Post a Comment