ஹைதராபாத்: ரூ 256 கோடி ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில், சம்பந்தப்பச்ச நிறுவனத்தின் விளம்பர தூதரான ஜெனிலியாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஞ்சனிபுத்திரா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் வீடு கட்டித் தரும் திட்டத்தை அறிவித்து, பெரும் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஜெனிலியா நியமிக்கப்பட்டிருந்தார். அவர் விளம்பரத்தில் நடித்து ஊக்கப்படுத்தியதால்தான் இந்தத் திட்டத்தில் அபார்மென்ட்களுக்கு பணம் கட்டினோம். ஆனால் அந்த நிறுவனம் ஏமாற்றிவிட்டது. எனவே இதுதொடர்பாக ஜெனிலியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஎச்.திருப்பதியாக் என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக ஜெனிலியாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி கேசி.பானு ஒரு வாரத்துக்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு தெரிவித்துள்ளார்.
அஞ்சனிபுத்திரா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் வீடு கட்டித் தரும் திட்டத்தை அறிவித்து, பெரும் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஜெனிலியா நியமிக்கப்பட்டிருந்தார். அவர் விளம்பரத்தில் நடித்து ஊக்கப்படுத்தியதால்தான் இந்தத் திட்டத்தில் அபார்மென்ட்களுக்கு பணம் கட்டினோம். ஆனால் அந்த நிறுவனம் ஏமாற்றிவிட்டது. எனவே இதுதொடர்பாக ஜெனிலியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஎச்.திருப்பதியாக் என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக ஜெனிலியாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி கேசி.பானு ஒரு வாரத்துக்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு தெரிவித்துள்ளார்.