'கோச்சடையான்' படத்தில் ரஜினிக்கு பொருத்தமான வில்லனாக இருப்பேன் என்று இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் கூறினார். ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா இயக்கும் படம், 'கோச்சடையான்'. ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். 'பெர்பாமன்ஸ் கேப்சரிங்' என்ற நவீன தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இதில் வில்லனாக நடிக்கும் ஜாக்கி ஷெராஃப் கூறியதாவது:
நான் நடிக்க வேண்டிய காட்சிகள் லண்டனின் படமாக்கப்பட்டுவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் நடித்தது சிறந்த அனுபவம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். இந்தப் படத்தில் ரஜினிக்கு பொருத்தமான வில்லனாக நடித்துள்ளேன். தமிழில் 'ஆரண்யகாண்டம்' படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அதிலிருந்து இது மாறுபட்டு இருக்கும். இதுவரை இந்திய படங்களில் பயன்படுத்தியிராத நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி சவுந்தர்யா இந்த படத்தை உருவாக்கி வருகிறார். இதன் மூலம் இந்திய சினிமாவில் சவுந்தர்யா புதிய டிரெண்டை உருவாக்குவார் என நம்புகிறேன். இவ்வாறு ஜாக்கி ஷெராஃப் கூறினார்.
நான் நடிக்க வேண்டிய காட்சிகள் லண்டனின் படமாக்கப்பட்டுவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் நடித்தது சிறந்த அனுபவம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். இந்தப் படத்தில் ரஜினிக்கு பொருத்தமான வில்லனாக நடித்துள்ளேன். தமிழில் 'ஆரண்யகாண்டம்' படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அதிலிருந்து இது மாறுபட்டு இருக்கும். இதுவரை இந்திய படங்களில் பயன்படுத்தியிராத நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி சவுந்தர்யா இந்த படத்தை உருவாக்கி வருகிறார். இதன் மூலம் இந்திய சினிமாவில் சவுந்தர்யா புதிய டிரெண்டை உருவாக்குவார் என நம்புகிறேன். இவ்வாறு ஜாக்கி ஷெராஃப் கூறினார்.
Post a Comment