சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், அவரது இரண்டாவது கணவர் ராஜன் விவாகரத்து மனு வரும் ஜூன் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மகன் விஜய் ஸ்ரீ ஹரிக்காக நடிகை வனிதா மீண்டும் தனது முதலாவது கணவர் ஆகாஷுடன் சேர்ந்துவிட்ட நிலையில், தனது இரண்டாவது கணவர் ஆனந்தராஜ் எனும் ராஜனிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்காக 2 பேரும் இணைந்து, பரஸ்பரம் விவாகரத்து பெறும் மனுவை தாக்கல் செய்தனர்.
விவாகரத்து பெறுவதற்கு 2 பேருக்கும் 6 மாதகால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று சென்னை குடும்பநல கோர்ட்டு முதன்மை நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்பு வனிதா மற்றும் ஆனந்தராஜ் ஆஜரானார்கள். இந்த வழக்கு விசாரணையை ஜுன் மாதத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
அப்போதே இருவருக்கும் விவாகரத்து கிடைத்துவிடும் எனத் தெரிகிறது.
மகன் விஜய் ஸ்ரீ ஹரிக்காக நடிகை வனிதா மீண்டும் தனது முதலாவது கணவர் ஆகாஷுடன் சேர்ந்துவிட்ட நிலையில், தனது இரண்டாவது கணவர் ஆனந்தராஜ் எனும் ராஜனிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்காக 2 பேரும் இணைந்து, பரஸ்பரம் விவாகரத்து பெறும் மனுவை தாக்கல் செய்தனர்.
விவாகரத்து பெறுவதற்கு 2 பேருக்கும் 6 மாதகால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று சென்னை குடும்பநல கோர்ட்டு முதன்மை நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்பு வனிதா மற்றும் ஆனந்தராஜ் ஆஜரானார்கள். இந்த வழக்கு விசாரணையை ஜுன் மாதத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
அப்போதே இருவருக்கும் விவாகரத்து கிடைத்துவிடும் எனத் தெரிகிறது.