இளையராஜாவின் இசைத் துணையுடன் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிப் படங்கள் அமைந்தன மோகனுக்கு. பல படங்களில் அவர் மைக்கும் கையுமாக வந்து பாடுவார்.
இதனால் அவருக்கு 'மைக்' மோகன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அவர் கடைசியாக நடித்தது சுட்டபழம். தொலைக்காட்சித் தொடர் வாய்ப்புகள், கேரக்டர் ரோல்கள் என எவ்வளவோ வந்தும் அவற்றை ஏற்கவில்லை. ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
மணிரத்னம் பட வாய்ப்பைக் கூட மறுத்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் மோகன். ஆனால் இந்தமுறை வில்லனாக நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இப்படத்தினை இயக்க இருக்கிறார்.
மோகன் ஏற்கெனவே வில்லனாக நடித்தவர்தான். நூறாவது நாள் படத்தில் அவர் வில்லத்தனம் கலந்த ஹீரோதான். அதில் விஜயகாந்த்தான் கிட்டத்தட்ட ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment