சென்னை: என் மகன் விஜய் அழகான நடிகன் இல்லை.. ரொம்ப அழகாக இருந்தாலும் தப்பு, என்றார் எஸ் ஏ சந்திரசேகரன்.
சென்னையில் நடந்த மதில் மேல் பூனை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "சினிமாவில் இப்போது யதார்த்தமாக இருக்கும் கதாநாயகர்களே ஜெயிக்கிறார்கள். முன்பெல்லாம் கதாநாயகன் என்றால் அழகாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.
இப்போது அப்படி இல்லை. பக்கத்து வீட்டுப் பையனை பார்த்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்க வேண்டும். என் மகன் விஜய் கூட அழகான நடிகர் அல்ல. யதார்த்தமாக இருப்பார்.
கதாநாயகன் என்றால், அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்று இப்போதைய ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
ரொம்ப அழகாக இருந்தாலும் தப்பு. இப்போது வரும் கதாநாயகர்களுக்கு இதுதான் பலம். விஜய் வசந்தும் யதார்த்தமாக இருக்கிறார். அவரும் விஜய் போல வர என்னுடைய வாழ்த்துக்கள்," என்றார்.
எஸ்.ஏ.சி. பேசுவதற்கு முன்பாக விஜய் வசந்த்தின் நண்பரும், நடன இயக்குநருமான விஜய் ஆதித்ராஜ் பேசுகையில் விஜய் வசந்த் அடுத்த விஜய்யாக வருவார் என்றார்.
அதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பதில்தான் மேலே நீங்கள் படித்தது!
Post a Comment