இந்நிலையில், கடந்த 11ம் தேதி ஒரு வாரப்பத்திரிகையில் நடிகை சோனா ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், ஆண்களை டிஷ்யூ பேப்பர் போல உபயோகிப்பதாக கூறியுள்ளார். இந்த பேட்டி சுயமரியாதையுள்ள நமது சமூகத்தைக் கேவலப்படுத்தும் வகையில் உள்ளது. குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள ஆண்களின் மரியாதையை கெடுக்கும் வகையில் உள்ளது. உள்நோக்கத்துடன் இந்த பேட்டி அளிக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மத்தியில் ஆண்கள் மீது உள்ள மதிப்பை கெடுக்கும் வகையில் இந்த பேட்டி உள்ளது.
அரசியலமைப்பு சட்டப்படி பேச்சுச் சுதந்திரம் என்ற போர்வையில் அவர் ஆண்களுக்கு எதிராக பேசியுள்ளார். எனவே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500 மற்றும் 504, 505 ( அவதூறு பரப்பும் வகையில் பேசுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு 13வது பெருநகர மாஜிஸ்திரேட் சிவகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அருள் துமிலன் ஆஜரானார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் விசாரணையை வரும் டிசம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Post a Comment