மும்பை: பாலிவுட் நடிகை வித்யா பாலன் தனது காதலரான யூடிவி தலைவர் சித்தார்த் ராய் கபூரை இன்று பஞ்சாபி மற்றும் தமிழ் முறைப்படி மணந்தார்.
பாலிவுட் நடிகை வித்யா பாலன் யூடிவி தலைவர் சித்தார்த் ராய் கபூரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்கள் திருமணம் இன்று மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள கிரீன் மைல் பங்களாவில் பிரமாண்டமாக நடந்தது. அவர்களின் திருமணம் பஞ்சாபி மற்றும் தமிழ் முறைப்படி நடந்தது.
திருமணத்திற்கு வந்திருந்தவர்களக்கு விருந்தில் தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. திருமண நிகழ்ச்சியின்போது வித்யா 3 சேலைகள் மாற்றினார். வித்யா கேரளாவில் பிறந்து மும்பையில் வளர்ந்தவர். கடந்த 2005ம் ஆண்டு வெளியான பரினீதா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தில் வித்யா சில்காக நடித்தார். அந்த படம் அவருக்கு பெயரும் புகழும் வாங்கிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment