சென்னை: சேட்டிலைட் உரிமத்துக்கான நிழல் யுத்தமே, கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பும், தடையும் என்று தெலுங்கு நடிக்ர் பவன்கல்யாண் கூறியுள்ளார்.
விஸ்வரூபம் தடை தொடர்பாக பல்வேறு திரைப்பட நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிவிட்டரில் அவர்கள் பேசி வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் குமார் வெளியிட்ட செய்தியில், விஸ்வரூபம் திரைப்படம் நாளை வெளியாகும். காத்திருங்கள்... அனைத்து தடைகளைத் தாண்டி வெல்க! என்று கூறியுள்ளார்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கூறுகையில், மத உணர்வுகளின் பெயரால் விஸ்வரூபத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சேட்டிலைட் உரிமத்துக்கான ‘நிழல் யுத்தம்' இது! என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கமலுக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment