சென்னை: நடிகை த்ரிஷா உறவுக்காரர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். த்ரிஷா இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே அவருக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் என்று பல காலமாக பேசப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே தாங்கள் நண்பர்கள் தான் என்று கூறி வந்தனர்.
இந்நிலையில் த்ரிஷாவின் அம்மா உமா தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளாராம். மாப்பிள்ளை வேறு யாருமில்லை அவர்களுடைய உறவுக்காரர் தானாம். அவர்கள் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
த்ரிஷா ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வருகிறார். அவரைத் தேடி வாய்ப்புகள் வந்தாலும் அதை அவர் ஏற்கவில்லை. திருமணத்தை மனதில் வைத்து தான் அவர் புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
Post a Comment