மனிதர்களுடன் நட்பு பாராட்டும் நன்றியுள்ள பிராணிக்களுக்காக செல்லமே நிகழ்ச்சி தந்தி டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் நாய் வளர்க்கவேண்டும் என்று அனைவருக்கும் ஆசை வருமாம்.
இந்த பரந்த உலகம் மானுடனுக்கு மட்டுமல்ல... பிற ஜீவராசிகளுக்கும் சேர்த்து தான். மனிதனுக்கு மனிதன் தோழமையோடு இருப்பது புதுமையல்ல... பலருக்கு தேவையின் அடிப்படையில் இந்த தோழமை நீடிக்கிறது. ஆனால் ஒரு பங்கு அன்பு செலுத்தினால் ஆயிரம் மடங்கு திரும்ப வழங்கும் பிராணிகள், மனிதர்களுக்கும் செல்லம் தானே.
‘செல்லமே' நிகழ்ச்சியை வழங்கும் ஷாலினி, செல்லப் பிராணிகளை வளர்க்கும் வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, அவற்றோடு அளவளாவுவார். சிரிப்பார். கண் கலங்குவார். பார்ப்போரை நெகிழ வைப்பார். தெரு நாய்கள் கூட அவரது அன்புப் பார்வையிலிருந்து தப்புவதில்லை.
செல்லப்பிராணிகளின் இயல்புகள், அவற்றின் உணவு, அவற்றை பராமரிக்க தேவைப்படும் மருந்துகள், இருப்பிட வசதி போன்ற நம் அவசரயுக வாழ்க்கையில் நாம் யோசிக்காத பல மென்மையான விஷயங்களை இந்நிகழ்ச்சி பேசுகிறது.
தந்தி தொலைக்காட்சியில் செவ்வாய்க்கிழமை தோறும் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘செல்லமே' நிகழ்ச்சி.
Post a Comment