32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த மோகன்லால் - பூர்ணிமா

|

Mohan Lal Poornima Reunite After 32 Years

32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர் மோகன்லாலும் பூர்ணிமா பாக்யராஜும்.

விஜய் நடிக்கும் ‘ஜில்லா' படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

1980-ல் ‘மஞ்சள் விரிஞ்ச பூக்கள்' என்ற மலையாள படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்தார். இப்படம் பெரிய ஹிட்டானது. 32 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஜில்லா' படத்தில் மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தை நேசன் இயக்குகிறார்.

பூர்ணிமாவுடன் நடிப்பது மகிழ்ச்சி தருவதாக மோகன்லால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மோகன்லாலுடன் நடிப்பது குறித்து பூர்ணிமா கூறுகையில், "மோகன்லாலும் நானும் ஜோடியாக நடித்த ‘மஞ்சள் விரிஞ்ச பூக்கள்' பெரிய வெற்றிப் படம். அதன் பிறகு இருவரும் நிறைய படங்களில் நடித்தோம். ஆனால் ஜோடியாக நடிக்கவில்லை. அதன் பிறகு எனக்கு திருமணம் மற்றும் குழந்தைகள் என்று ஆன பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். ஆனாலும் சென்னையில் மோகன்லால் படங்களை தொடர்ந்து பார்ப்பேன்.

மோகன்லாலுடன் நடிக்க வேண்டும் என்று விஜய் கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டேன். 32 ஆண்டுக்கு பிறகு நானும் மோகன்லாலும் காதல் ஜோடியாக இல்லாமல் கணவன் மனைவியாக நடிக்கிறோம்," என்றார்.

 

Post a Comment