தொட்டால் தொடரும் என்ற பெயரில் புதிய படம் உருவாகிறது. இந்தப் படத்தை கேபிள் சங்கர் என்ற புதிய இயக்குநர் இயக்குகிறார்.
எப் சி எஸ் கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் மூலம் வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை போன்ற படங்களைத் தயாரித்த துவார் சந்திரசேகரன், அடுத்து பாக்கணும் போல இருக்கு, இருவர் உள்ளம் போன்ற படங்களைத் தயாரிக்கிறார்.
அடுத்து துவார் சந்திரசேகரன் தயாரிக்கும் படம் தொட்டால் தொடரும்.
கேபிள் சங்கர் ஏற்கெனவே கலகலப்பு படத்துக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.
இந்த தொட்டால் தொடரும் படத்தில் முழுக்க முழுக்க காமெடியில் மிரட்டப் போகிறாராம்.
இந்தத் தலைப்பு குறித்து அவர் கூறுகையில், "ஒருதவறான விஷயத்தை தொடப்போய் அது விடாமல் எப்படி துரத்துகிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்ல இருக்கிறோம். படத்தின் ஹீரோ மற்றும் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கிறேன். மிக முக்கியமான நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது," என்றார்.
Post a Comment