மும்பை: துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாராம் ஷாருக்கான்.
நடித்து கல்லா கட்டுவது தவிர கடை திறப்பு, விளம்பர படங்கள், நட்சத்திர நிகழ்ச்சி, விருது விழா, ஸ்டார் ஓட்டல்களில் புத்தாண்டு நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் நடிகர், நடிகைகள் லட்சணக் கணக்கில் பணம் பார்த்து வருகின்றனர்.
கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா, மல்லிகா ஷெராவத், கோலிவுட் ஹீரோயின்கள் அனுஷ்கா, காஜல் அகர்வால், அசின் போன்ற நடிகைகளும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்கேற்கின்றனர்.
இது தவிர இப்போது திருமண வீடுகளில் நடனம் ஆடுவதற்காக அதிரடியாக சம்பளம் கேட்கிறார்களாம். சமீபத்தில் ஷாருக்கான், ஒரு திருமணத்துக்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடுவதற்காக ரூ. 8 கோடி கேட்டாராம்.
இதுபற்றி பாலிவுட் பிரமுகர் கூறும்போது,‘துபாயில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் அரை மணி நேரம் நடனம் ஆட ஷாருக்கானை கேட்டார்கள். இதற்கு அவர்கள் ரூ.8 கோடி சம்பளம் கொடுக்க தயார் என்றபோது ஓகே சொன்னார். திருமண விழாக்களில் நட்சத்திரங்கள் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இப்போது பேஷன் ஆகி வருகிறது. தாங்கள் ஆசைப்பட்ட நடிகரோ, நடிகையோ வந்து ஆடுவதற்கு எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தர தயாராக இருக்கிறார்கள் என்றார்.
Post a Comment