இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு முதலவ்வர் ஜெயலலிதாவுக்கு பிலிம்சேம்பர் நேரில் அழைப்பு விடுத்தது.
இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையடுத்து, தென்னிந்திய வர்த்தக சபை சார்பாக சென்னையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
இவ்விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக தென்னிந்திய வர்த்தக சபையின் தலைவர் சி.கல்யாண் தலைமையில் சங்க நிர்வாகிகள் நடிகர் சிவகுமார், ரவி கோட்டகரா, பொன் தேவராஜன், எடிட்டர் மோகன், கே.எஸ்.ஸ்ரீனிவாசன், கே.பிரசாத் ஆகியோர் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து, இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
விழாவில் கலந்து கொள்ள முயற்சிப்பதாக முதல்வர் கூறியதாக பிலிம்சேம்பர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Post a Comment