காடு, மலை, யானை என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் இயக்குநர் பிரபு சாலமனின் அடுத்த படத்தின் கதை சுனாமியை மையப்படுத்தியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ங
கதையை மட்டுமே நம்பும் பிரபு சாலமன் மிகப்பெரிய கதாநாயகர்களை தேடாமல் புதுமுகங்களை அறிமுகம் செய்வார். அதேபோல் புதிய படத்தில் நான் ஈ படத்தின் மூலம் பிரபலமான ‘நானி' தான் ஹீரோ என்கின்றனர்.
கும்கி படத்தில் யானையை மையப்படுத்தி கதை இருந்தது. அதேபோல் புதிய படத்தில் 40 நிமிடத்திற்கு சுனாமியை மையமாக வைத்து பிரம்மாண்டப்படுத்த திட்டமிட்டுள்ளாராம்.
இதற்கேற்ப திரைக்கதை அமைத்துள்ள பிரபு சாலமன், ஹாலிவுட் திரைத்துறையைச் சேர்ந்தவர்களையும் தனது குழுவில் சேர்த்துக் கொண்டுள்ளாராம். சுனாமிக்கு பிந்தைய வாழ்க்கைச் சூழலும் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment