தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லாத அழகிய காதல் கதை... என்ற அடை மொழியுடன் ஒரு படம் தயாராகிறது.
இந்தப் படத்தை இயக்குபவர் விஜய் ஆன்டனி நடித்த 'நான்' படத்தின் இயக்குநர் ஜீவா சங்கர்.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில் இசை பிரதான பங்கு வகிக்கிறது. எனவே இசைக்கு யுவன் சங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கேடி பில்லா கில்லாடி ரங்காவுக்குப் பிறகு எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் பி மதன் தயாரிக்கும் படம் இது.
பிரபல முகங்கள் யாருமின்றி, முழுக்க முழுக்க புதுமுகங்கள் மட்டுமே நடிக்கும் இந்தப் படம், ஒவ்வொருவருக்கும் அவர்களின் இனிய இளமை நாட்களை நினைவுபடுத்தும் அளவுக்கு இருக்கும் என இயக்குநர் ஜீவா சங்கர் தெரிவித்துள்ளார்.
Post a Comment