வரி, வரியா பாடிட்டு, ரூ 5.5 கோடி வரி கட்ட மறந்துட்டீயே...: கம்பி எண்ணும் ‘கிரம்மி’ பாப் பாடகி

|

Lauryn Hill S Jail Sentence Tax Evasion Is Good News

லண்டன்: ரூ.5 1/2 கோடி வரிபாக்கிக்காக ‘கிரம்மி' விருது வாங்கிய பாப் பாடகி லாரன்ஹில்க்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகியான லாரன்ஹில், அரசாங்கத்துக்கு ரூ.5 1/2 கோடி வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தார். இது குறித்து அவருக்கு பலமுறை நோட்டீசு கொடுக்கப்பட்டது.

லாரன்ஹில், அதை கண்டு கொள்ளவே வில்லையாம். எனவே, அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு பாடகி லாரன் ஹில்லுக்கு 3 மாதம் சிறை தண்டனையும், 3 மாதம் வீட்டு காவலும் விதித்தும் தீர்ப்பளித்தது.

இதுகுறித்து லாரன்ஹில் கூறும் போது, 'நான் எப்போதும் இது போன்று வரிபாக்கி வைத்ததில்லை. ஆனால், தற்போது எனக்கு சரிவர இசை நிகழ்ச்சிகள் கிடைக்காததால் வரி செலுத்த முடியவில்லை' என்றார்.

இவர் உயரிய விருதான, 'கிரம்மி' விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment