ஆன்ட்ரியாவுடன் மீண்டும் நெருக்கம்... தொடர்ந்து வாய்ப்பு தரும் அனிருத்!

|

ஆன்ட்ரியாவுடன் மீண்டும் நெருக்கம்... தொடர்ந்து வாய்ப்பு தரும் அனிருத்!
சென்னை: முத்தக் காட்சி லீக் ஆனதால் முறுக்கிக் கொண்டு பிரிந்த ஆன்ட்ரியாவும் அனிருத்தும் மீண்டும் இணக்கமாகி விட்டனர்.

மூன்று படங்களில் முன்னணி இசையமைப்பாளராகிவிட்ட அனிருத்தும், பிரபல நடிகை ஆன்ட்ரியாவும் நெருக்கமாகப் பழகி வந்தனர். இருவரும் உதட்டோடு உதடு கவ்விக் கொண்ட காட்சி, புகைப்படங்களாக மீடியாவில் வெளியானது.

இதனால் அப்செட்டான ஆன்ட்ரியா, 'அனிருத்தும் நானும் எப்போதோ ஒரு விருந்தில் நெருக்கமாக இருந்த ஒரு தருணத்தில் எடுத்த படம் அது. இதைப் போய் பெரிசுபடுத்தறாங்க. இது கேவலமான செயல். இப்போது அனிருத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் வயதுக்கு ஏற்றவர் அல்ல அவர்,' என்று பேட்டி கொடுத்தார்.

ஆன்ட்ரியாவுடன் மீண்டும் நெருக்கம்... தொடர்ந்து வாய்ப்பு தரும் அனிருத்!

இருவரும் அதன் பிறகு சில மாதங்கள் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.

இப்போது இருவரும் சமாதானமாகிவிட்டார்கள். அந்த முத்தப் படம் வெளியானதற்கு அனிருத் மன்னிப்புக் கேட்டதால், மீண்டும் நண்பர்களாகிவிட்டார்களாம். அனிருத் தனது வணக்கம் சென்னை படத்தில் பாட ஆன்ட்ரியாவுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

தொடர்ந்து தன் படங்களில் பாட ஆன்ட்ரியாவுக்கு வாய்ப்பளிப்பேன் என்றும், நல்ல குரல் வளம் கொண்ட அவரைப் பயன்படுத்துவதில் தவறில்லையே என்றும் அனிருத் விளக்கம் அளித்துள்ளார்.

 

Post a Comment