ஜனவரி 10-ம் தேதி வழக்கு விசாரணை- வருவாரா அஞ்சலி?

|

சென்னை: நடிகை அஞ்சலி மீதான அவதூறு வழக்கு வரும் ஜனவரி 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அஞ்சலி நேரில் ஆஜராவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அங்காடித் தெரு உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர், தனது சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாகக் கூறி இருந்தார்.

ஜனவரி 10-ம் தேதி வழக்கு விசாரணை- வருவாரா அஞ்சலி?

இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறி இயக்குநர் களஞ்சியம் தரப்பில் அவரது வக்கீல்கள் ஜெயபிரகாஷ், சுரேஷ்பாபு ஆகியோர் சைதாப்பேட்டை பெருநகர 17-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

நேற்று இந்த வழக்கு மீதான விசாரணை 17-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு(பொறுப்பு) உமாராணி முன் வந்தது. அப்போது இந்த வழக்கை ஜனவரி மாதம் 10-ந்தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் இதுவரை ஒருமுறை கூட அஞ்சலி ஆஜராகவில்லை. எனவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அஞ்சலியின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதால், நேரில் ஆஜராக அஞ்சலிக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த முறை அவர் சென்னைக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சித்தியுடனான பிரச்சினைக்குப் பிறகு சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குப் போன அஞ்சலி, அதன் பிறகு ஒருமுறை கூட சென்னைக்கு வரவில்லை.

 

Post a Comment