சென்னை: ஏற்கெனவே அறிவித்தபடி வரும் மே 9-ம் தேதியன்று, ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இதனை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் நேற்று அறிவித்தனர்.
கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகரின் நிதிப் பிரச்சினைகள் காரணமாக படம் வெளியாவது சந்தேகம் என்பது போன்ற தகவல்கள் கடந்த சில தினங்களாக மீடியாவில் அதிகம் வெளியாகிவந்தன.
இது படத்தை எதிர்ப்பார்த்துக் கிடந்த பல லட்சம் ரசிகர்களைத் தவிப்புக்குள்ளாக்கியது.
படம் வெளியாகுமா இல்லையா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், திட்டமிட்டபடி கோச்சடையான் படம் மே 9-ம் தேதியே வெளியாகும் என தயாரிப்பாளர் முரளி மனோகர் நேற்று அறிவித்தார்.
இதனை படத்தின் இயக்குநர் சவுந்தர்யாவும் உறுதிப் படுத்தினார். படத்தின் பிஆர்ஓ ரியாஸ் அகமதுவும், கோச்சடையான் 9-ம் தேதி வெளியாவது நிச்சயம் என தகவல் வெளியிட்டுள்ளார்.
Post a Comment