ஹைதராபாத்: செக் மோசடி வழக்கில் நடிகையும் தயாரிப்பாளருமான ஜீவிதா ராஜசேகருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் 25 லட்சம் அபராதமும் விதித்துள்ளது ஹைதராபாத் நீதிமன்றம்.
நடிகை ஜீவிதா, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து, பின்னர் நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து தயாரிப்பாளராக மாறினார்.
திரைப்பட இயக்குநர் சேகர் ரெட்டி என்பவருக்கு ரூ 22 லட்சத்துக்கான காசோலைகள் தந்துள்ளார் ஜீவிதா. ஆனால் அவற்றை வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் திரும்பிவிட்டன.
இதற்கு பதில் பணத்தை திரும்பச் செலுத்தவும் தவறிவிட்டாராம் ஜீவிதா. இதுகுறித்து ஹைதராபாத் எர்ரமன்சில் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார் அந்தத் தயாரிப்பாளர்.
இந்த வழக்கில் அனுப்பப்பட்ட பல சம்மன்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாராம் ஜீவிதா. இதைத் தொடர்ந்து இன்று வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜீவிதாவுக்கு 2 ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையும், ரூ 25 லட்சம் மதிப்புள்ள பிணையப் பத்திரங்களை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment