திருட்டு விசிடிக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும் - சரத்குமார், நளினி போலீசில் மனு

|

சென்னை: திருட்டு விசிடியை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சிபிசிஐடி அலுவலகத்தில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் புகார் தரப்பட்டுள்ளது.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் விஜயகுமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் ஆகியோர் இன்று எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு சென்று ஏ.டி.ஜி.பி. அஸ்டோஸ் சுகலாவை சந்தித்தார்கள்.

அவர்களுடன் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நளினி, டைரக்டர் சங்கம் சார்பில் ரமேஷ் கண்ணா, ரவி மரியா, சண்முக சுந்தரம், பெப்சி சார்பில் சபரி கிரிசன், சுந்தர் ஆகியோரும் சந்தித்தார்கள்.

திருட்டு விசிடிக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும் - சரத்குமார், நளினி போலீசில் மனு

திருட்டு வி.சி.டி.யை ஒழிக்கும்படி அவர்கள் வற்புறுத்தினார்கள்.

பின்னர் போலீஸ் டி.ஜி.யிடம் அவர்கள் கொடுத்த மனு விவரம்:

மக்களின் முதல்வர் ஜெயலலிதா திரையுலகினரின் வேண்டுகோளை ஏற்று 2001-2006 ஆண்டுகளில் திருட்டு வி.சி.டிக்கு எதிராக குண்டர் சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் திருட்டு வி.சி.டி. புழக்கம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. எனவே குண்டர் சட்டத்தின் துணை கொண்டு திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க வேண்டும்.

திருட்டு விசிடிக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும் - சரத்குமார், நளினி போலீசில் மனு

திரையரங்குகளில் திருட்டு விசிடி

புதிய படம் வெளியானதும் ஏதோ ஒரு திரையரங்கில் திருட்டு வி.சி.டி எடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட திரையரங்குகள் மீதும் அதில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸ் சோதனை

தமிழகத்தில் உள்ள அனைத்து சி.டி. கடைகளிலும் திருட்டு வி.சி.டி விற்கப்படுகிறது. எனவே அருகேயுள்ள காவல் நிலையங்கள் மூலம் காவல்துறையினர் தொடர்ந்து சோதனை செய்யும் பட்சத்தில் திருட்டு வி.சி.டி. விற்பதை தடுக்கலாம்.

திருட்டு விசிடிக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும் - சரத்குமார், நளினி போலீசில் மனு

லோக்கல் சேனல்களில்

தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள லோக்கல் சேனல்களில் புதுப்படம் வெளியான அடுத்த நாளே அந்த திரைப்படத்தை போட்டு வருகிறார்கள். ஒவ்வொரு சேனலையும் குறைந்தது 10 ஆயிரம் பேர் பார்த்து விடுகிறார்கள். ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட லோக்கல் சேனல்களின் உள்ளன. அப்படி செய்யும் லோக்கல் சேனல்கள் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

திருட்டு விசிடிக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும் - சரத்குமார், நளினி போலீசில் மனு

சாலையோரங்களில்

காய்கறி விற்பனை போல சாலை ஓரங்களிலும், ரெயில் நிலையங்களிலும், அரசு பேருந்துகள் தவிர தமிழகத்தில் ஓடும் அனைத்து ஆம்னி பஸ்களிலும், பஸ் நிலையங்களிலும் பயமின்றி திருட்டு வி.சி.டி. விற்கிறார்கள். இவற்றை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Post a Comment