இந்தியில் தான் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷை இயக்குகிறார் மணிரத்னம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் இப்போது தமிழில் ஓகே கண்மணி என்ற தமிழ்ப் படத்தை இயக்குகிறார். இதில் துல்க்வார் சல்மான் நடிக்கிறார்.
இந்தப் படம் முடிந்த கையோடு அவர் இந்தியில் ஒரு படம் இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகனாக தனுஷ் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
ராஞ்ஜனா மூலம் இந்தியில் அறிமுகமான தனுஷ், இப்போது ஷமிதாப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தியில் தனுஷுக்கென நல்ல எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. எனவே தனுஷை இயக்குவதன் மூலம் இந்தியில் தனது நெடுநாளைய வெற்றிக் கனவை நனவாக்க முடியும் என நம்புகிறார் மணிரத்னம்.
Post a Comment