சென்னை: மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோர் கலந்து கொண்டு அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கடந்த டிசம்பர் 23-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவர் மரணமடைந்து 13-நாட்கள் ஆன நிலையில், 13-ம் நாள் நினைவஞ்சலி நேற்று பிற்பகல் கடைபிடிக்கப்பட்டது.
ரஜினிக்கு சொந்தமான ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கே.பாலச்சந்தரின் நினைவஞ்சலி கூட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகுமார், ராஜேஷ், விவேக், தாமு, லாரன்ஸ், யூகி சேது, நடிகைகள் ஜெயசித்ரா, வாணி ஜெயராம், ஸ்ரீப்ரியா, மானு, குயிலி, லலிதா குமாரி, சுபா வெங்கட், தயாரிப்பாளர்கள் தாணு, பி.எல்.தேனப்பன், எடிட்டர் மோகன், இயக்குனர்கள் மணிரத்னம், சரண், விக்ரமன், வி.சேகர், சுரேஷ் கிருஷ்ணா, ஆர்.கே.செல்வமணி, ஏ.எல்.விஜய் மற்றும் பெப்சி சிவா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பாலச்சந்தரின் உருவப்படத்துக்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
Post a Comment