தொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன்? - ஏ எம் ரத்னம் பதில்

|

அஜீத்தின் அடுத்த படத்தையும் தானே தயாரிக்கப் போவதாகவும், அஜீத் தனக்கு மிக சவுகர்யமான நாயகன் என்றும் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் கூறியுள்ளார்.

என்னை அறிந்தால் படம் வெளியாவது குறித்து அதன் தயாரிப்பாளரான ஏ எம் ரத்னம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன்? - ஏ எம் ரத்னம் பதில்

அப்போது அவரிடம், அடுத்தடுத்து அஜீத் படங்களைத் தயாரிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.எம்.ரத்னம், "ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை அடுத்து மீண்டும் அஜித்தை வைத்து படம் தயாரிக்கப் போகிறேன்.

இந்தப் படத்தை வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார்.

அஜித் எனக்கு சவுகரியமான கதாநாயகனாக உணர்கிறேன். அவரும் அப்படித்தான் கருதுகிறார். எனவேதான் எங்கள் கூட்டணி தொடர்கிறது', என்றார்.

 

Post a Comment