தங்கள் குடும்பத்தில் மூன்றாவதாக ஒருவர் வரப்போவதாக சிநேகாவின் கணவர் நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.
நடிகர் பிரசன்னாவுக்கும், சிநேகாவுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் சினேகா சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
இந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை சிநேகா கர்ப்பம் என செய்தி வெளியாவதும், அதை பிரசன்னா மறுப்பதுமாக போய்க் கொண்டிருந்தது.
தற்போது கடந்த சில மாதங்களாக சிநேகா எந்த படப்பிடிப்புக்கும் செல்லாமல் இருந்து வருகிறார். நிகழ்ச்சிகளையும் தவிர்த்துவிடுகிறார்.
இந்நிலையில், பிரசன்னா தனது குடும்பத்தில் புதிதாக ஒருவர் வரப் போவதாகக் ட்வீட் செய்துள்ளார்.
அதில், "இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியத்துவமானது. மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். விரைவில் எங்கள் குடும்பத்தில் புதிதாக ஒருவர் வருகிறார்," என்று சூசகமாகக் கூறியுள்ளார்.
சிநேகா கர்ப்பமாக இருப்பதை பிரசன்னா இப்படிக் குறிப்பிடுகிறாரா அல்லது வழக்கம் போல 'அதெல்லாம் இல்லீங்க, நான் வேற ஒருவரைச் சொன்னேன்' என்று சொல்லிவிடப் போகிறாரோ என்ற தயக்கத்தால், இன்னும் பெரிய அளவில் இந்த விஷயம் செய்தியாகாமல் உள்ளது!
Post a Comment