வீரபாண்டிய கட்டபொம்மனை வாங்கிய மலேசிய தமிழர்

|

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி பெரும் பாராட்டுகளைக் குவித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் மறுவெளியீட்டு உரிமையை மலேசிய வாழ் தமிழர் பாண்டியன் பெற்றுள்ளார்.

மேடைகளில் கலை நிகழ்ச்சி நடத்த, புதிய நடிகர்கள் நடித்துக் காட்ட இன்றைக்கும் பயன்படுவது 'வானம் பொழிகிறது... ' வசனம்தான். இந்த வசனம் பேசிய நடித்து சிவாஜியின் நடிப்பை வடமாநில நடிகர்கள், வெளிநாட்டு நடிகர்கள் வியந்து பார்த்த காலம் அது.

வீரபாண்டிய கட்டபொம்மனை வாங்கிய மலேசிய தமிழர்

அரை நூற்றாண்டுக்குப் பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை மலேசிய வாழ் தமிழர் மலேசியா பாண்டியன் எஸ்பிவி ஏவி இன்டர்நேஷனல் சார்பில் வாங்கியுள்ளார்.

 

Post a Comment