சிரஞ்சீவி மகன் ராம் சரணுக்கு இன்று நிச்சயதார்த்தம்!

|


ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி உபாஸனாவுக்கும் இன்று மாலை நிச்சயதார்த்தம் நடக்கிறது.

இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரபல நடிகரப் சிரஞ்சீவி யின் மகன் ராம்சரண். தெலுங்கில் பிரபல நடிகர். சில வாரங்களுக்கு முன் ராம்சரணுக்கு திருமணம் முடிவானது. மணமகள் உபாஸனா. இவர் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியின் பேத்தி.

ராம்சரண்-உபாஸனா திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் இன்று மாலை நடக்கிறது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நிச்சயதார்த்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோரையும் அழைத்துள்ளதாக சிரஞ்சீவி குடும்பத்தினர் தெரிவித்தனர். அரசியல் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த விழாவையொட்டி பண்ணை இல்லம் அமைந்துள்ள பகுதியி்ல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

Post a Comment