பழம்பெரும் இயக்குனர் கே.சங்கரின் பேரன் விக்னேஷ் மேனன் எழுதி, இயக்கும் படம் 'விண்மீன்கள்'. ராகுல் ரவீந்திரன், விஷ்வா, ஷிகா, அனுஜா அய்யர், பாண்டியராஜன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆனந்த் ஜீவா. இசை, ஜூபின். பாடல்கள், நா.முத்துக்குமார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பாண்டியராஜன் பேசியதாவது: ஊட்டியின் உயரமான பகுதிகளிலும், தேயிலை தோட்டங்களிலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. இரவு நேரம் ஷூட்டிங் முடித்து விட்டு காரில் வருவோம். அப்போது ரோட்டில் சுவர் மாதிரி தென்படும். அது மிகப் பெரிய யானை என்று, உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே தெரியும். நடுரோட்டில் கார் என்ஜினை 'ஆப்' செய்துவிட்டு அமைதியாக காத்திருப்போம். சில மணி நேரம் கழித்து யானை நகர்ந்து செல்லும். பிறகுதான் எங்களுக்கு உயிர் வரும். இப்படி ஒவ்வொரு நாளும் த்ரில்லிங்கான அனுபவம். இதில் என்னை வயதான தோற்றத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். புதுமையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Post a Comment