பிரபுதேவா உருவாக்கியுள்ள இசை ஆல்பத்துக்கு 'போருடா' என்று தலைப்பு வைத்துள்ளார். சிம்புவின் 'லவ் ஆன்தம்', தனுஷின் 'சச்சின் ஆன்தம்' இசை ஆல்பங்களுக்கு அடுத்து பிரபுதேவாவும் இசை ஆல்பம் வெளியிட இருக்கிறார். இந்த ஆல்பம் காதலர் தினமான நாளை வெளியாவதாக இருந்தது. இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 'போருடா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த இசை ஆல்பத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா நடனமாடியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "எனது நண்பர்களும் வியாபார நிறுவனமும் ஆல்பம் ரிலீஸை தள்ளி வைக்கக் கூறினர். இதையடுத்து ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்தியில் எனது இயக்கத்தில் அக்ஷய் குமார், சோனாக்ஷி நடிக்கும் 'ரவுடி ரத்தோர்' படம் பெரும்பாலும் முடிந்துவிட்டது" என்றார்.
Post a Comment