நிஜ கேரக்டரில் நடிப்பது சவால்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் படம், 'வனயுத்தம்'. வீரப்பன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் இதில், கிஷோர், விஜயலட்சுமி, அர்ஜுன் உட்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் மில்டன் ஒளிப்பதிவு. படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் அர்ஜுன் பேசியதாவது: வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் கேரக்டரில் நடிப்பது சவாலானது. காரணம் அவர்கள், அவர்களையே திரையில் பார்க்கும்போது கொஞ்சம் தவறினால் கூட சம்பந்தப்பட்டவர்களின் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும். போலீஸ் அதிகாரி விஜயகுமார் கேரக்டரில் நடிக்கிறேன். நிறைய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், இதில் யதார்த்தமாக நடித்திருக்கிறேன். வீரப்பன் கதை எல்லோருக்கும் தெரியும் என்பதால் ஆரம்பத்தில் தயங்கினேன். ஆனால் இயக்குனர் ரமேஷின் 12 வருட ஆய்வு, அவருடைய உழைப்பை பார்த்து வியந்து நடித்தேன். வீரப்பனுடன் வாழ்ந்தவர்களும், அவரால் கடத்தப்பட்டவர்களும் என்னுடன் நடித்திருக்கிறார்கள். இது எனக்கு புது அனுபவம். இந்தப் படம் எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்.


 

Post a Comment