விரைவில் வரவிருக்கும் ஒரு புதிய படத்தின் பெயர்தான் நீங்கள் படித்த தலைப்பு! இந்தப் படத்தை இயக்குபவர் அதிரடி ஆக்ஷன் மசாலா ஸ்பெஷலிஸ்ட் என அறியப்பட்ட ஏ வெங்கடேஷ்.
ஆனால் இந்தப் படம் வழக்கமான அவரது பாணி படமாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட காமெடி களத்தில் அமைந்துள்ளதாம்.
அந்த வித்தியாசத்தை தலைப்பிலேயே உணர்த்த வேண்டும் என்பதற்குதான், எனக்கு வாய்த்த நண்பர்கள்இப்படி என்று பெயர் வைத்தாராம். இதற்கு முன் அவர் இயக்கிய படங்களின் தலைப்பு ரொம்பவே சுருக்கமாக இருக்கும். மகா பிரபு, சாக்லெட், பகவதி, தம், குத்து, ஏய்...இப்படித்தான் இருக்கும்!
மவுண்ட் மூவி மேக்கர்ஸ் சார்பில், ஆர்.மது தயாரிக்கும், இந்தப் படத்தில் கதாநாயகனாக புதுமுகம், 'தேஜஸ்' நடிக்கிறார். 'தூவானத் தும்பிகள்", "மூனாம் முறா" உள்பட நூறு மலையாள படங்களில் நடித்த,முன்னாள் மலையாள வில்லன் நடிகர் அலெக்ஸின் மகன். கதாநாயகியாக 'உத்ரா' அறிமுகம் ஆகிறார்.
தம்பி ராமையா,சிங்கம் புலி,மயில்சாமி ,ஸ்ரீரஞ்சனி, கூத்துப்பட்டறை ஜார்ஜ் , ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் முதன் முதலாக ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
"கழட்டி விடவும் முடியாம, கண்டிக்கவும் முடியாம மூன்று நடுத்தர வயது நண்பர்களோட, அவஸ்தை படுற ஒரு இளைஞனுக்கு காதலி ஒருத்தி குறுக்கே வருகிறாள். அப்புறம் என்னாகிறது என்பதுதான் கலகலப்பான இந்தப்படத்தின் திரைக்கதை," என்கிறார் வெங்கடேஷ்.
படத்தின் முதல் பாதியில், கதாநாயகனும், கதாநாயகியும்,பேசும் வசனங்கள்.. நாலே வரிகள்தானாம்.
இசை: ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு-ஏ.வெங்கடேஷ், வசனம்-பட்டுக்கோட்டை பிரபாகர், பி.ஆர்.ஓ - ஜான்சன்.
மே மாதம் படப்பிடிப்பு தொடங்கி, வரும் ஆகஸ்ட்டில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி, பழனி, ஊட்டி போன்ற இடங்களில் நடக்கிறது.
ஆனால் இந்தப் படம் வழக்கமான அவரது பாணி படமாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட காமெடி களத்தில் அமைந்துள்ளதாம்.
அந்த வித்தியாசத்தை தலைப்பிலேயே உணர்த்த வேண்டும் என்பதற்குதான், எனக்கு வாய்த்த நண்பர்கள்இப்படி என்று பெயர் வைத்தாராம். இதற்கு முன் அவர் இயக்கிய படங்களின் தலைப்பு ரொம்பவே சுருக்கமாக இருக்கும். மகா பிரபு, சாக்லெட், பகவதி, தம், குத்து, ஏய்...இப்படித்தான் இருக்கும்!
மவுண்ட் மூவி மேக்கர்ஸ் சார்பில், ஆர்.மது தயாரிக்கும், இந்தப் படத்தில் கதாநாயகனாக புதுமுகம், 'தேஜஸ்' நடிக்கிறார். 'தூவானத் தும்பிகள்", "மூனாம் முறா" உள்பட நூறு மலையாள படங்களில் நடித்த,முன்னாள் மலையாள வில்லன் நடிகர் அலெக்ஸின் மகன். கதாநாயகியாக 'உத்ரா' அறிமுகம் ஆகிறார்.
தம்பி ராமையா,சிங்கம் புலி,மயில்சாமி ,ஸ்ரீரஞ்சனி, கூத்துப்பட்டறை ஜார்ஜ் , ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் முதன் முதலாக ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
"கழட்டி விடவும் முடியாம, கண்டிக்கவும் முடியாம மூன்று நடுத்தர வயது நண்பர்களோட, அவஸ்தை படுற ஒரு இளைஞனுக்கு காதலி ஒருத்தி குறுக்கே வருகிறாள். அப்புறம் என்னாகிறது என்பதுதான் கலகலப்பான இந்தப்படத்தின் திரைக்கதை," என்கிறார் வெங்கடேஷ்.
படத்தின் முதல் பாதியில், கதாநாயகனும், கதாநாயகியும்,பேசும் வசனங்கள்.. நாலே வரிகள்தானாம்.
இசை: ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு-ஏ.வெங்கடேஷ், வசனம்-பட்டுக்கோட்டை பிரபாகர், பி.ஆர்.ஓ - ஜான்சன்.
மே மாதம் படப்பிடிப்பு தொடங்கி, வரும் ஆகஸ்ட்டில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி, பழனி, ஊட்டி போன்ற இடங்களில் நடக்கிறது.