நடிகை ஷெர்லின் சோப்ராவுக்குப் புதுப் பெருமை கிடைத்துள்ளது.அதாவது பிளேபாய் பத்திரிக்கைக்காக அவர் போஸ் கொடுக்கப் போகிறார். பிளேபாய் இதழில் இடம் பெறும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கப் போகிறது.
பிளேபாய்க்கு போஸ் கொடுப்பதற்காக ஷெர்லின் சோப்ரா, தற்போது லாஸ் ஏஞ்சலெஸ் வந்துள்ளார். பிளேபாய் நிறுவன அதிபர் ஹியூக் ஹெப்னரின் பங்களாவில்தான் தங்கியுள்ளார். அவருடன் சேர்ந்து போஸ் கொடுத்தும் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வாரத்தில் ஷெர்லினை விதம் விதமாக போட்டோ எடுக்கப் போகின்றனராம்.
இதுகுறித்து ட்விட்டரில் ஹெப்னல் கூறுகையில், இன்று நடந்த டோமினோ விளையாட்டில் ஆஷ்லே ஹாப்ஸ் வென்றார். நான், கிறிஸ்டல், திரிஷா (நம்ம் திரிஷா இல்லை), செல்சியா, இந்தியாவிலிருந்து வந்துள்ள ஷெர்லின் சோப்ரா ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். ரொம்ப வேடிக்கையான இரவு இது என்று குதூகலமாக கூறியுள்ளார் ஹெப்னர்.
இதேபோல ஷெர்லின் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், உலகிலேயே மிகவும் அன்பான நபர் ஹெப்னர்தான் என்று கூறியுள்ளார். மேலும் பிளேபாய்க்காக போஸ் கொடுக்கும் முதல் இந்தியப் பெண் என்பதில் பெருமைப்படுவதாகவும் புளகாங்கிதப்பட்டுள்ளார்.
எப்படி போஸ் கொடுக்கப் போகிறாரோ ஷெர்லின்...!
Post a Comment