அடுத்தடுத்து அரைகுறையாக போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதை தொழிலாக வைத்திருக்கும் பூனம் பாண்டே இப்போது பிபாஷா பாசுவை வம்புகிழுத்து நக்கலடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நாளிதழுக்கு பிபாஷா அளித்த பேட்டியில் இன்றைய ஆண்கள் தோற்றுப்போனவர்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக பேசியுள்ளார் பூனம் பாண்டே. டிவிட்டர் மூலம் இந்த விளாசலை விட்டுள்ளார் பூனம்.
இதுகுறித்து அவர் எழுதுகையில், பிபாஷ தனது வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களையே தேர்ந்தெடுத்ததால்தான் அவர்களும் தோற்றுப் போனார்கள், இவரும் தோற்றுப் போனார். அதற்காக அத்தனை ஆண்களும் தோல்வியாளர்கள் என்று அர்த்தம் கிடையாது.
ஆண்கள் அனைவருமே தோல்வியாளர்கள் என்று ஒருவர் கூறினால், அவர் உண்மையான ஆண்மகனை இன்னும் சந்திக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
ஒருவேளை இன்றைய ஆண்கள் அனைவருமே தோல்வியாளர்கள் என்று பிபாஷா கூறினால், பிறகு அவர் அசிங்கம் பிடிச்ச, பழைய பணக்காரர்களுடனா போய் வாழப் போகிறார்...
திரையுலகில் 10 வருடங்களுக்கும் மேலாக நடித்த ஒருவர், இப்போது வந்து ஆண்களைப் பார்த்து தோத்தாங்குளிகள் என்று கூறினால், உண்மையிலையே தோத்தாங்குளி யார் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை... இப்படிப் போகிறது பூனம் பாண்டேவின் பேச்சு.
ஓ.கே. புதுச் சண்டைக்குப் பூஜை போட்டாச்சு.. கொஞ்ச நாளைக்கு பூனத்திற்கு பொழப்பு நன்றாகப் போகும்...!
Post a Comment