சினிமாவில் நடிக்க யாரும் எனக்கு சிபாரிசு செய்யவில்லை. விமல் சிபாரிசுசெய்வதாகக் கூறுவதும் தவறு. யார் சிபாரிசும் தேவையில்லை, என்று நடிகைஓவியா கூறியுள்ளார்.
களவாணி, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு என விமலும் ஓவியாவும்தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துவிட்டதால், இருவரைப் பற்றியும் ஏககிசுகிசு.
விமல்தான் ஓவியாவுக்கு சிபாரிசு செய்வதாகக் கூறப்பட்டது. இருவருக்கும்தனிப்பட்ட முறையில் நெருக்கம் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் சில்லுனு ஒரு சந்திப்பு படத்தின் பிரஸ் மீட்டில்,வதந்திகளைத் தவிர்க்க, இனி ஓவியாவுடன் நடிக்க மாட்டேன் என்று விமல்அறிவித்தார்.
இந்த நிலையில், தனது விளக்கத்தையும் ஓவியா அளித்துள்ளார்.
அதில், "எனக்கு விமல் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறப்படுவதில்உண்மையில்லை. எனக்காக வேறு நடிகர்களும் வாய்ப்பு தேடி அலையவில்லை.அதற்கான அவசியமும் இல்லை. இயக்குனர்கள்தான் எனக்கு வாய்ப்புதருகிறார்கள். அவர்கள் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கருதியதால் என்னை அணுகி வாய்ப்பு தருகிறார்கள். நானும் இனி விமலுடன் நடிக்கமாட்டேன்," என்றார்.
Post a Comment